காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் ஈரோட்டில் பிரசாரம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் களை கட்டி உள்ளது. இந்த சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
unknown nodeகாங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு, தினமும் ஒவ்வொரு திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அமைச்சர் சந்தியில் பாலாஜி, நேரு, அணைப்பில் மகேஷ், செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சரகள் அனைவரும் ஈரோட்டில் முகாமிட்டு, தேர்தல் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.
unknown nodeஅதன்படி, குமலன்குட்டை, கணபதி நகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு உள்ளிட்ட பகுகுதிகளில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதுபோன்று, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார்.