தமிழகத்தில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளுடன் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறது.
திமுக சார்பில் விருப்ப மனு கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேர்காணல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலிலும், 9-ம் தேதி திண்டுக்கல், மதுரையில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…