தமிழகத்தில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சிகளுடன் தீவிர பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுக ஒருபுறம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபுறம் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறது.
திமுக சார்பில் விருப்ப மனு கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8,388 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு 7,967 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேர்காணல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8-ம் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலிலும், 9-ம் தேதி திண்டுக்கல், மதுரையில் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…