இரு குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம் வைத்து கொடுத்த தாய் – ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு..!

Published by
Rebekal

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கட்சி எனும் பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் 21 வயது பெண்ணுக்கு சஞ்சனா எனும் மூன்றரை வயது பெண் குழந்தையும், சரண் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. திடீரென குழந்தை சரண் மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூறவே, அருகிலிருந்தவர்கள் குழந்தையாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் சாப்பிட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல ஆண்களிடம் பேசி பழகியதுடன், ஒருவர் குழந்தைகள் இருப்பதால் பேச்சை நிறுத்தியதாகவும், இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டால் மீண்டும் பேசுவார் என்ற எண்ணத்தில் குழந்தைகள் இருவருக்கும் உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பெண் குழந்தை உணவை அவ்வளவாக சாப்பிடாததால் ஒன்றும் செய்யவில்லை, சிறுவன் சாப்பிட்டதால் உயிரிழந்துவிட்டான் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

6 minutes ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

2 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

3 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

4 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

4 hours ago