நல்லகண்ணுக்கு கொரோனா கிடையாது..விரைவில் வீடு திரும்புவார் – விஜயபாஸ்கர் தகவல்

Default Image

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா கிடையாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் கூறுகையில், சாதாரணக் காய்ச்சல்  தான் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறினார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  தற்போது நல்லகண்ணுவுக்கு பரிசோதனை செய்ததலில் கொரோனா தொற்று இல்லை என சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இவர் தற்போது நலமுடன் இருக்கிறார்  என்றும் 5 நாட்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்லகண்ணு வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்