முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது..!

Published by
murugan

நாகர்கோவில் சார்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் உடன் சென்று விட்டார். இது குறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவி மற்றும் வாலிபர் இருவரையும் போலீசார் மீட்டனர்.

பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி கூறினார். இதற்கு மாணவியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ( 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியின் தாய், அசோக்குமார், கார்த்திக் மற்றும் பால், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கன்னியாகுமாரி போலீசார் கைது செய்தனர்.

Published by
murugan

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

7 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

8 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

9 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

9 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

9 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

10 hours ago