தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் – இன்று அதிகாரிகள் தமிழகம் வருகை

Election Commission officials are coming to Tamil Nadu today to discuss the preparations for next year's assembly elections in Tamil Nadu.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வர உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகம் வர உள்ளனர்.தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.மேலும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைப்பெறுகிறது.