நிவர் புயல் எச்சரிக்கை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Chief Minister Palanisamy is scheduled to hold consultations with ministers and officials on the Nivar storm precautionary measures.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னையில் இருந்து 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளநிவர்புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை மறுநாள் பிற்பகலில் கரையைக் கடக்க வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.தலைமைச் செயலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.