காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குளச்சலில் நடைபெற்ற ஊர்வலத்தில் தடியடி விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் தடியடிய நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, குளச்சலில் தடையை மீறி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், தடுத்து நிறுத்திய போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறினார். மேலும் பேரணி சென்றவர்கள் தாக்கியதில் 4 போலீசார் காயம் அடைந்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025