தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முதல் உத்தரவாக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனும் முதல் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டு, இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…