தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முதல் உத்தரவாக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனும் முதல் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டு, இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…