வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்! தொண்டர்களை நாளை சந்திக்கிறேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

தனது பிறந்த நாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள

vijayakanth

தனது பிறந்த நாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கேப்டன் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2005-ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன்.

தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என்றுள்ளார். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல், மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்படும்.

இதுபோன்று நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்யவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம்.

என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் எனது பிறந்தநாளான நாளை காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன்.

என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென எனவும் கூறியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு என செய்திகள் வெளியான நிலையில், நம்முடன் இருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.

unknown node