அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வருத்தம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமிழகத்துக்கு தேவையான ஒரு முக்கியமான விஷயம் நடைபெற்றுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தலைவர், அமைச்சர்கள், சட்டமனற்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தோழர்கள் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள் என கூறினார். அமைச்சரவை பட்டியலில் உங்கள் பெயர் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது உங்கள் பெயர் அதில் இடம் பெறவில்லை, இதனால் ஏதும் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்து முக ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…