மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

archana patnaik

சென்னை :தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.வேட்புமனு தாக்கல் மார்ச் 30, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 6, 2026 வரை நடைபெறும். மார்ச் 31, ஏப்ரல் 3, ஏப்ரல் 5 ஆகிய நாட்கள் விடுமுறை என்பதால் அந்த நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது.

எனவே தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கலுக்கு உண்மையில் 5 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7, 2026 அன்றும், வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் ஏப்ரல் 9, 2026 அன்றும் நடைபெறும். தேர்தல் ஆணையம் இந்த அட்டவணையை நேற்று மாலை வெளியிட்டது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்து சில முக்கியமான விஷயங்களை தெரிவித்துள்ளார். அதன்படி, தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 2106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் சோதனையில் பிடிபடும் பணம் அல்லது பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அவை உரியவர்களுக்கு ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆவணங்கள் இல்லாத பணம், பொருட்கள் சிக்கினால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒட்டுமொத்தமாக, தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 23 வாக்குப்பதிவு, மே 4 முடிவுகள் என அட்டவணை வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்களால் வேட்புமனு தாக்கலுக்கு 5 நாட்கள் மட்டுமே கிடைப்பது கட்சிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் மூலம் பணப்பட்டியல், சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும், தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை செய்யலாம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 30ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் – அர்ச்சனா பட்நாயக் தகவல்!