ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை.
முன்பெல்லாம் விளையாட்டு என்றால் கிரிக்கெட், ஹாக்கி, கேரம் என கைவினைப்பொருட்கள் உதவியுடன் விளையாடி உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தனர். ஆனால், தற்போதைய தலைமுறைகள் முழுவதையும் தங்களது மொபைல் போனிலேயே முடித்து விடுகின்றனர். அண்மை காலங்களாகவே தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக சூதாடி அதில் தங்களது பணத்தை இழப்பதால் விரக்தி அடைத்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஏற்கனவே 11 மரணங்கள் இதனால் நிகழ்ந்துள்ள நிலையில், இது குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு, இன்னும் முடிவெடுக்க கால அவகாசம் கேட்டு பதிலளித்துள்ள முதல்வரின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
மேலும், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் உயிரைப்பறிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் தடை செய்ய தயக்கம் கட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், விரைவில் இந்த உயிர்கொல்லி ஆன்லைன் விளையாட்டை தடை செய்து தமிழக தாய்மார்களின் கண்ணீரை துடைத்திட வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…