தமிழ்நாடு

சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பெட்ரோல் விலை!பாஜக ஆட்சியில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் பெட்ரோல் விலை?

 4 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ,மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின் பெட்ரோல், டீசல் இன்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் டெல்லியில் பெட்ரோல், டீசலில் 19 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2012ம் ஆண்டுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் சிரமம் கருதியும், பணவீக்கம், விலைவாசி உயராமல் இருக்க உடனடியாக உற்பத்தி, கலால்வாரி உயர்வைக் குறைக்க வேண்டி மத்திய அரசுக்கு கடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்றபின் பிரதமர் […]

#ADMK 7 Min Read
Default Image

தேனீ அருகே திருக்குறள் வழியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்!!

திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள். தேனி அருகே […]

marraige 19 Min Read
Default Image

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:தொடர்ந்து 3வது நாளாக பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை !

தொடர்ந்து 3வது நாளாக,அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளை, மதுரை  காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக, தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விருதுநகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் […]

#Chennai 3 Min Read
Default Image

தமிழகத்தில் கல்விக்கு நிறைய மாற்றங்கள் தேவை! அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் ,பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்விக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை ; முயற்சி நின்றாலும் மரணம் தான் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

இராமநாதபுரத்தில்  நூதன முறையில் இரு கடைகளில் கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளை!

2 கடைகளில் நூதன முறையில் ராமநாதபுரத்தில்  உரிமையாளர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லாப்பெட்டியை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த வியானன்று சக்கரைக்கோட்டையில் உள்ள மரியா கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைக்கு, இருசக்கர வாகனத்தில் 2 பேர் வந்துள்ளனர். உரிமையாளர் சுந்தரவேலிடம், பெட்ரோல் பங்க்கின் அருகே ஒரு பெண் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பதாகக் கூறியுள்ளனர். சுந்தரவேலிடம் சொல்லச் சொன்னதாகவும் அவர்கள் பதற்றத்துடன் கூறியுள்ளனர். அதிர்ந்து போன சுந்தரவேல், கடையை அப்படியே போட்டுவிட்டு ஊரில் உள்ள எல்லா பெட்ரோல் […]

#ADMK 4 Min Read
Default Image

தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு!அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ,தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.  வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் டி.என்.பி.சி.க்கு அளிக்கப்பட்டிருப்பதாக உதயகுமார் குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

RBUdhayaKumar 2 Min Read
Default Image

தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி என்ற பேச்சுக்கே இடமில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , தமிழக சுகாதாரத்துறையில் முதல்முறையாக பணியிடங்கள் காலி இல்லை என்ற நிலை எட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அம்மன்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தை  திறந்துவைத்த  பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், வரும் 26-ஆம் தேதி 252 மருத்துவர்கள், 350 செவிலியர்கள், ஆயிரம் மருந்தாளுநர்களுக்கு முதலமைச்சர் நேரடியாக பணி நியமனங்களை அளிக்க உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

#ADMK 2 Min Read
Default Image

தூக்கு தண்டனை சரியான ஒன்றுதான் !சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்,பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை  வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் செய்து, 12 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவித்து அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இந்தியாவில் […]

#ADMK 4 Min Read
Default Image

சீனாவின் ஒத்துழைப்புக்காக காத்திருக்கும் இந்தியா..!

  சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவிரைவு ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போகிறது. சீனாவின் ஒத்துழைப்புடன் இரு நகரங்களுக்கு இடையே அதிவிரைவு ரயில் சேவையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தென் இந்தியாவின் இரு முக்கிய பெருநகங்களாக விளங்கும் சென்னை மற்றும் பெங்களூர் இடையே போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏராளமான ரயில்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பஸ்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், பணி மற்றும் தொழில் நிமித்தமாக இரு நகரங்களுக்கு இடையே […]

India waiting to cooperate with China .. 6 Min Read
Default Image

ஒவ்வொரு தமிழரின் தோளிலும் 45 ஆயிரம் ரூபாய் கடன் !கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன்,தென்னிந்திய அளவிலான அரசியலை முன்னெடுத்து, வட மாநிலங்களுக்கு இணையாக குரலை எழுப்பினால் உரிமைகளைக் கேட்டுப் பெற முடியும் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டிற்கான தலைமைத்துவம்; அடுத்த சுற்று’ என்ற கருத்தரங்கத்தில் பேசிய அவர் இதனை கூறினார். சோழர்காலத்தில் தஞ்சாவூரிலிருந்து கம்போடியாவை சிறப்பாக ஆட்சி நடத்தியவர்கள் தமிழர்கள் என்ற அவர், தற்போது ஒவ்வொரு தமிழரின் தோளிலும் 45 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது என்றார். திராவிடம் என்பது புவியியல் ரீதியான பெயர் தான் […]

#ADMK 2 Min Read
Default Image

எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு!

பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் அளித்த புகாரில் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை காவல் துறை ஆணையரிடம் நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் மனு அளித்தனர். எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக இழிவான பதிவைப் பகிர்ந்திருந்தார். இது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள் எஸ்.வி.சேகர் மீது கடுமையான […]

#ADMK 3 Min Read
Default Image

மாட்டு வண்டியில் மணல் கடத்தல்..,

லால்குடி:சுப்ரமணியன் மகன் ஞானமணி லால்குடி ஆங்கரை மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் . நடராஜன் மகன் பாலகுமார. இருவரும் அடிக்கடி இடையாற்றுமங்கலம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் போலீசார் இடையாற்றுமங்கலம் அடுத்த கொள்ளிடம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் இடுபட்டிருந்தனர் அப்போது மேற்கண்ட இருவரும் மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்து 2 பேரையும் போலிசார் […]

#Police 2 Min Read
Default Image

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதி வெளியீடு!

தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர்,கூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கான தேதியைத் வெளியிட்டுள்ளார். இரண்டாம் நிலைக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகம் இருந்தால் வருகிற 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும். நான்காம் நிலை கூட்டுறவுச் சங்கங்களுக்கு  மே 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. […]

#ADMK 2 Min Read
Default Image

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலா வீட்டில் தீவிர சோதனை!

பேராசிரியை நிர்மலா தேவியிடம் , மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக  சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்று வருகிறது. நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில், முனைவர் படிப்பு படித்து வந்த கருப்பசாமி, பல்கலைக்கழக அதிகாரி முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக நிர்மலா […]

#ADMK 5 Min Read
Default Image

சிறுமி ஆசிபா படுகொலை செய்ததை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்..,

திருச்சி:மக்கள் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், காஷ்மீரில் சிறுமி ஆசிபாவை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்  மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் நேற்று மாலை நடந்தது.மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனர் பசீர்அகமது தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வகித்தார். வக்கீல்கள் தமிழகன், குணசீலன், நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி உமாமகேஸ்வரி, மக்கள் பாதை ஸ்டீபன், திருச்சி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மை குரு […]

#Kashmir 2 Min Read
Default Image

வன்கொடுமை வழக்குகளில்விதிகளைப் பின்பற்ற வேண்டும்..!! தமிழக டிஜிபிக்கு உத்தரவு..!!

வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்துமாறு தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டு பட்டுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணைப் பாலியல் பாலத்காரம் செய்த வழக்கில் சுரேந்திரகுமார் என்பவருக்குத் தஞ்சாவூர் நீதிமன்றம் 7ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுரேந்திரகுமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வன்கொடுமை வழக்குகளை டி.எஸ்.பி., அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரி விசாரிக்க […]

maduraibench 3 Min Read
Default Image

இன்னும் நிறைய மாற்றம்..!! பள்ளிக்கல்வித்துறைக்கு தேவை..!! அமைச்சர் செங்கோட்டையன்..!!

பள்ளிக்கல்வித்துறையில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கல்விக் கண்காட்சியை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய செங்கோட்டையன், மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை ; முயற்சி நின்றாலும் மரணம் தான் என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

#ADMK 2 Min Read
Default Image

திருச்சி மாநகராட்சி பகுதியில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம்..,

திருச்சி:பொதுமக்கள் வசதிக்காக திருச்சி மாநகராட்சியில்  திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வயலூர் சாலையில் கோ.அபிஷேகபுரம் கோட்டம் அருகில், மத்தியபஸ் நிலையம் அருகில், தில்லைநகர் பூங்கா ஆகிய மூன்று இடங்களில் திறந்தவெளி பூங்கா அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது.இவ்வாறு உடற்பயிற்ச்சி கூடம் அமைத்தது பொதுமக்களிடம் அதிகஅளவில் வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை கூடுதல்இடங்களில் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்து  மாநகராட்சி ரூ.65லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதையடுத்து தற்போது 38வது வார்டு ராஜாராம் […]

3 Min Read
Default Image

காவிரி வழக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்ட சீராய்வு மனு குறித்து..!!முதலமைச்சர் ஆலோசனை..!!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலந்து கொண்டார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சீராய்வு மனு தொடர்பாகவும், காவிரி வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் […]

#Politics 2 Min Read
Default Image

போலி பீடி விற்பனை செய்தவர்கள் கைது..,

மேலூர்: சையது பீடிகள் நிறுவன மேலாளர் முகமது அப்துல்லாவும், 5 பூமார்க் பீடி நிறுவன மேலாளர் அம்சாபாயும் மேலூர் பகுதியில் தங்களது நிறுவனம் பெயரில் போலியாக பீடிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை போலீஸ் எஸ்பியிடம் புகார் செய்தனர்.இதனை அடுத்து  நேற்று மேலூர் பஸ்ஸ்டாண்ட் பகுதி, மார்க்கெட் பகுதி, திருச்சி ரோடு ஆகிய இடங்களில் எஸ்பி உத்தரவின்பேரில் மேலூர் டிஎஸ்பி சக்கரவர்த்தி திடிரென  சோதனை நடத்தினார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடிகள், குட்கா ஆகியவை […]

#Madurai 2 Min Read
Default Image