டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை. தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் , குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு தற்போது 21 முதல் 37வயது (எஸ்.சி/எஸ்.டி , எம்.பி.சி மற்றும் இதர பிரிவுக்கு ) வரை என நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை உயர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை […]
ஆடர்லி தொடர்பாக டிஜிபி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியுள்ளார். ஆடர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை […]
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில், இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, கொள்கைக்கான ஆலோசனை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளி மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டிகள், வெற்றி – தோல்வி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இனி செயலியில் பதிவு செய்ய உத்தரவு. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வருகை பதிவை செயலியில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, பள்ளி மாணவர்களின் உடற்தகுதி, விளையாட்டு ஆர்வம், பங்குபெறும் போட்டிகள், வெற்றி – தோல்வி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் இனி செயலியில் பதிவு செய்து அதை தொடர்ச்சியாக […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4890 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4.890 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.39,120-க்கு விற்பனையாகிறது. […]
சிறப்பாக செயல்பட்ட தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிப்பு. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 5 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி ஆகியோருக்கும், தமிழகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வராஜன் மற்றும் புதுச்சேரி எஸ்ஐ செல்வராகனுக்கு விருதுகள் மத்திய உள்துறை அமைச்சக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கிய […]
சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா தொடக்கம். சென்னை தீவு திடலில், தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு திருவிழா இன்று தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவானது, 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் நா.சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,83-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 12) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். உப்பளத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தூடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று நிகழ்வில், உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதலில் 5 பேருக்கு காசோலைகளை வழங்கினார் முதலமைச்சர். அதன்படி, உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் வரை உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். இதுபோன்று, தமிழ்நாடு உப்பு […]
பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகள் முழுவதுமாக பிங்க் நிறத்திற்கு மாற்றம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு வந்தது. இந்த பேருந்துகளின் முன்பக்கம் […]
இன்று உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ஆசிய யானைகளில் 60% இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி. கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். On #WorldElephantDay, reiterating our commitment to protect the elephant. You would be happy to know that India houses about 60% of […]
புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வரும் 17-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. பொறியியல் பாடத் திட்டங்கள் நடப்பாண்டில் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டங்களை வகுத்துள்ளது. முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மாற்றிஅமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது என்றும் இதற்கு முன்னதாக கல்வி மானியக் குழுவில் ஒப்புதல் பெற […]
ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இறந்து போன தமிழக வீரருக்கு இரங்கல் தெரிவித்தும், 20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் […]
வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து. ரூ.2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர் ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சனாதன தர்மத்தின் மீது உங்களின் ஆழ்ந்த வெறுப்பு புரிகிறது ப.சிதம்பரம் குறித்து அண்ணாமலை ட்வீட். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்றுதெரிவித்திருந்தது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் நிச்சயம் தடை விதிக்கப்பட்டும் என அமைச்சர் ரகுபதி பேட்டி. புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சம்பந்தமான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி தான் ஆன்லைன் ரம்மி குறித்து கருத்து கேட்டுள்ளோம். ஆன்லைன் ரம்மி கருத்து கேட்பு குறித்து இபிஎஸ் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது என்றார். அரசு நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி […]
ஜம்மு காஷ்மீரில் தமிழக வீரர் மரணத்திற்கு சசிகலா இரங்கல். ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் […]
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் கஞ்சா, குட்கா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு […]
மக்கள் நல பணியாளர் பணியில் சேர 2 வார அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு. மக்கள் நல பணியாளர் பணியில் மீதமுள்ள 4% பேர் சேர 2 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணியில் சேருவதற்கான இறுதிக்கெடுவை 2 வாரம் நீட்டிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.7,500 ஊதியத்தை ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று மக்கள் நலப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமரே உங்களை தொந்தரவு செய்வது கருப்பு நிறமா? அல்லது அதை அணிந்த மனிதனா? என ஜோதிமணி எம்.பி ட்வீட். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள், ராகுல் காந்தி அவர்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தை பதிவிட்டு, அன்பிற்குரிய நரேந்திரமோடி அவர்களே உங்களைத் தொந்தரவு செய்வது கருப்பு […]