ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்க ஏற்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா […]
சுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தகவல். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் […]
நெய்வேலியில் தேர்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை இது குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நெய்வேலியில் இயங்கி வரும் நவரத்னா நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அண்மையில் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பேர் அனைவருமே வெளிமாநிலத்தவர்கள். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், ‘ ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களில் 75% அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவராக […]
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்தது. ஆடி மாதத்தில் ஆடி 18 எனும் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, இன்று பொதுமக்கள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, குல தெய்வம், கோவில் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில், தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செலுத்தியாக உள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் […]
பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனால் குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி […]
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கொரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,74-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 3) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையோடு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவு தினத்தையொட்டி இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஈரோடு மாவட்டம் ஓடாநிலை என்ற இடத்தில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளுக்கு, டெண்டர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து எஸ்.பி. […]
நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. இந்த நிலையில், பயன்படுத்தக்கூடாது வார்த்தைகளில் முதலை கண்ணீர் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து, நேற்று பேசிய நிர்மலா […]
அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என அறிவிப்பு. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரிக்க உள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை 2 வாரங்களில் விசாரித்து முடிக்க […]
தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில், 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது என தமிழக நிதியமைச்சர் விளக்கம். விலைவாசி உயர்வு, எரிபொருள் மீதான வரி உள்ளிட்டவை குறித்து மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரை குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு அவர்கள் கூறினார்கள். நவம்பர் 2021 […]
பழங்காநத்தம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை (ஜூலை 29) சிறப்பு வழிபாடு செய்ய முத்துக்குமார் ஏ முருகன் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. பூஜை முடிந்து பக்தர்கள் பிரசாதத்தை பயன்படுத்தி அம்மனுக்கு கஞ்சி தயார் செய்தனர். முத்துக்குமாரும் இன்னும் சில பக்தர்களும் சுமார் 6 பெரிய பாத்திரங்களில் கஞ்சியைக் காய்ச்சிக் கொண்டிருந்தபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு கொதிக்கும் பாத்திரம் ஒன்றில் விழுந்து பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் […]
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.3 லட்சம் இடங்களில் சேர […]
இந்திய வானிலை மையம் “ரெட் அலர்ட்” கொடுத்த பின்பும் மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்ததாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை. கடல் சீற்றம்,கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்குமென இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த திமுக அரசு மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவலை அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில […]
இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 2021-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளா என ஒரு நாளிதழில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இடதுசாரிகள் ஜனநாயகத்தின் காவலர்கள்! இந்தியாவிலேயே அதிக நாட்கள் சட்டமன்றம் கூடிய மாநிலம் கேரளம் (61), இதிலும் கடைசி குஜராத்தான் (24). ஒரு மசோதா நிறைவேற குஜராத் எடுத்துக் கொள்ளும் […]
அடுத்த 3 நாட்களுக்கு வரும் கன மழையை கையாள தயாராக உள்ளோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி. அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு அரசியல் கட்சி அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது. அவரிடம் ஆவணம் இருந்தால் பேச சொல்லுங்கள், வெற்று விளம்பரத்திற்காக பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டம் வாரியாக, மின்வாரிய உயர் அதிகாரிகள் இரவு […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, 3 வாரம் […]
புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு என முதல்வர் அறிக்கை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாகும் புதிய பன்னாட்டு விமான நிலையம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் வளர்ச்சிப் பெற்ற கட்டமைப்பு வசதிமிகுந்த மாநிலங்களில் முன்னணியில் திகழும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு நமது திராவிட மாடல் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. நம் மாநிலத்திற்கு […]