தமிழ்நாடு

#JustNow: ஆசிரியர்களுக்கு இனி செயலி மூலம் வருகைப்பதிவு.. இன்று முதல் அமல்!

பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது வருகைப் பதிவை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி மூலம் பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகைப் பதிவை TNSED App-ல் மட்டுமே பதிவிடும் முறை […]

#TNGovt 3 Min Read
Default Image

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை..!

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று  முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathya Pratha Sahoo 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,624 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,548 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 345 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]

#Corona 2 Min Read
Default Image

இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக உள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்தியவியல் ஜனநாயகம் வலுவாக உள்ளது என “Dreams Meet Delivery” எனும் நூல் வெளியிட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் பேச்சு. சென்னை போரூரில் “மோடி 2020 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி” நூல் வெளியிட்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டுவர வந்துள்ளதாக மோடி கூறுவார். நரேந்திர மோடி ஆட்சியில் எங்கேயாவது ஊழல் என கேள்விப்பட்டுள்ளீர்களா என கேள்வி […]

#Chennai 2 Min Read
Default Image

பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து..!

பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு முதல்வர் வாழ்த்து.  பதிப்புத்துறையில் இந்தியா – பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்கள், பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ளார். இதனையடுத்து,  மு.க.ஸ்டாலின் அவர்கள், செவாலியே விருது பெறவுள்ள பதிப்பாசிரியர், கண்ணன் (எ) எஸ்.ஆர்.சுந்தரம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டர் பதிவில், ‘பதிப்புத்துறையில் இந்தியா – […]

- 3 Min Read
Default Image

#BREAKING: கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்பு – அமைச்சர்

கனியாமூர் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள். கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கனியாமூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும், கட்டாய கல்வி உரிமை […]

#MinisterAnbilMahesh 3 Min Read
Default Image

தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும் – டிடிவி

அதிமுகவில் தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும் என டிடிவி தினகரன் பேச்சு.  மதுரையில் அமமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து பேசிய அவர், தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும்; […]

#ADMK 3 Min Read
Default Image

#BREAKING : தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பில் கடிதம்..!

ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரிக்கு கடிதம்.  ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, […]

- 3 Min Read
Default Image

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி பாஜகவில் இணைந்தார்.  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பஜவில் இணைந்தார். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர்  பக்கத்தில்,’பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு,  மூன்று தலைமுறை நீதித்துறை அனுபவமும் 30 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள் […]

- 4 Min Read
Default Image

#BREAKING: நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. […]

#Chennai 3 Min Read
Default Image

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி தரப்படாது – அமைச்சர் மெய்யநாதன்

ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படாது என்பது உறுதி என்று அமைச்சர் தகவல். கடந்த 2013-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறு தோண்டிய போது பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்திற்கு பிறகு விவசாயிகளின் போராட்டம் காரணமாக கிணறு முற்றிலுமாக மூடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மீண்டும் கிணறை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முனைப்பு காட்டியபோது தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. பெருங்குடியில் ஓஎன்ஜிசி […]

#Thiruvarur 4 Min Read
Default Image

ஆகஸ்ட் 1-ஆம் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..! அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு..?

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து […]

- 2 Min Read
Default Image

#JustNow: இந்தியாவில் ஒரே மொழி என்பது சாத்தியமில்லை – மலையாளத்தில் பேசிய முதல்வர்!

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என்று மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் உரை. கேரள மாநிலம் திருச்சூரில் மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் கருத்தரங்கில் காணொளி வாயிலாக உரையாற்றிய தமிழாண்டு முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியம் இல்லை, ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலமே தவிர பலவீனம் அல்ல. இந்தியாவில் அனைவரும் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

அதிமுகவில் இருந்து ஈபிஎஸ் நீக்கம் தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம்..!

அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் நீக்கம் செய்யாத நிலையில்,  அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமனம் செய்து கடந்த சில நாட்களுக்கு முன் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். […]

#ADMK 2 Min Read
Default Image

#BREAKING: வியூகத்துக்கு முற்றுப்புள்ளி.. திமுக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடி வருகையால் திமுக –  பாஜக கூட்டணி ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில், முதலமைச்சர் விளக்கம். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. பிரதமர் மோடி வருகையால் திமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் செஸ் […]

#CMMKStalin 6 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பகல் 12 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

iraiyanbu 2 Min Read
Default Image

சென்னை மாநகராட்சி கூட்டம் – அதிமுக வெளிநடப்பு

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.  சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக ஆலோசனை  நடைபெற்றது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- 2 Min Read
Default Image

ஆக.1ல் அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை. ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்த பணிகளை […]

#ElectionCommission 2 Min Read
Default Image

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று – கனிமொழி எம்.பி

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட்.   இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்படுகிறது.  இதுகுறித்து, அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று. இது போன்ற வன்முறைகள் நடக்காதவாறு அனைத்து வழிகளிலும் கவனத்துடன் செயல்படுவோம். இதை முற்றிலும் ஒழிக்க, இது குறித்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.’ என பதிவிட்டுள்ளார். மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான […]

- 2 Min Read
Default Image

கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிப்பு!

கொந்தகை தளத்தில் கிடைத்த முதுமக்கள் தாழிகளினுள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொல்லியல் துறை சார்பில் கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்கு பழங்காலத்து பொருட்கள் பல கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் இதுவரை கொந்தகை தளத்தில் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மண்டையோடு, கை, கால், எலும்புகள் உணவுக்குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இவை மரவனும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த […]

- 2 Min Read
Default Image