சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன . இந்த நிலையில்,63-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 23) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.37,568-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலுக்கு அவரது உறவினர்கள், உள்ளூர் மக்கள் கண்ணீர் அஞ்சலி. கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை இன்று பெற்றுக் கொள்ளவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவித்திருந்தனர். மாணவியின் உடலை இன்று காலை 6-7 மணிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இன்றுக்குள் இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இரண்டு முறை மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மாணவியின் உடலை, பெற்றோர் […]
பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு. பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா ஆணை வெளியிட்டுள்ளார். பாலிடெக்னிக் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக இன்று ஆர்ப்பாட்டம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மின்கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் மாவட்ட மின் அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் முதன்மையான இழப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,093 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,033 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 466 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் […]
சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என ட்வீட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது. சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 […]
தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் அதிமுக தொடர்ந்து அழிவை நோக்கி செல்கிறது என சசிகலா அறிக்கை. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை செயல்படாமல் தடுப்பதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதிமுக, எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு […]
சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூரியாவிற்கு வாழ்த்துகள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதினை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் […]
குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க […]
காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம். ரூ.3-க்கு டிம்பருக்குள் மரக்கன்றுகள் விநியோகம் செய்ய உள்ளனர். காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் சென்னையில் செய்தியாளர்களிடம் […]
அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை நீதிமன்றம் உத்தரவு. காவல்துறை பதிலளிக்கும் வரை அதிமுகவின் 4 மாவட்ட செயலாளர்கள் உள்பட 11 பேரை கைது செய்யக்கூடாது என்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் ஆதிராஜாராம், விருகை ரவி, அசோக் உட்பட 11 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு அன்று ஓபிஎஸ், […]
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 25 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ,தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ,கடலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் கன மழை […]
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்கு வரவேற்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது. இந்நடவடிக்கையானது போலி வாக்காளர்களை நீக்குவதற்கு உதவும். கள்ள ஒட்டுகளைத் தடுக்கும். அதேசமயத்தில் […]
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்ளவதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் சம்மதம். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவி உடல் கூராய்வு அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரேத பரிசோதனை அறிக்கைகளை 3 மருத்துவர்கள் அடங்கிய குழு ஆராய வேண்டும் என்றும் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஜிப்மரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி […]
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு என உயர்கல்வித்துறை அறிவிப்பு. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை […]
திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து சசிகலா அறிக்கை. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சசிகலா அவர்கள் திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘திமுக அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு […]
நாளை காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு மற்றும் உடல் ஒப்படைப்பு தொடர்பாக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவியின் உடல் மறு கூராய்வு உத்தரவில் உச்சநீதிமன்றம் தடையிடாததால் ஏற்கனவே, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை. மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என உயர்நீதிமன்றம் நீதிபதி பெற்றோருக்கு அறிவுறுத்தினார். நீதிமன்றம் உத்தரவிட்டும் மாணவியின் உடலை […]
மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வேலை வழங்க தமிழக அரசு அரசு அரசாணை வெளியீடு. தமிழகத்தில் மாநில அளவில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு சங்கங்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ.3.31 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியாகியுள்ளது. மாநில விளையாட்டு சங்கங்களில் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூ.20 லட்சமாக மானியம் உயர்த்தப்படும் […]