21 மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசுவது கண்டனத்துக்கு உரியது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். சபரிமலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு தேசிய சமிதி விழா சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இதையே தான் சனாதன தர்மமும் சொல்கிறது. நாட்டின் பொருளாதாரம், ராணுவ வளர்ச்சியடைவை போல் ஆன்மீகத்திலும் […]
தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஏ.ஆர்.ரகுமான் ட்வீட். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் ஆற்றல் […]
ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு மற்றும் எந்தவிதமான இதர லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் உடனடியாகக் கொண்டுவர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தல். ஒரு நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனையை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகப் பணிபுரிய அனுமதித்ததன் விளைவாக, […]
கல்விக்கும், மருத்துவத்துக்கும் அக்கறை செலுத்தி வருகிறோம் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு. சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், கொளத்தூரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மறுசீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். ஜமாலியாவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார். […]
பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா கலந்து கொண்டு விளையாடினார். குரூப் ஏ பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரக்ஞானந்த் அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டம் வென்றார். 7.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்று சாம்பியன் ஆகியுள்ளார். கடைசிச் சுற்றில் இந்திய வீரர் பிரனீத்தைத் தோற்கடித்தார். பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து […]
பாஜக தொடர்ந்து குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதும் கவலையளிக்கிறது என ஜோதிமணி எம்.பி ட்வீட். அருப்புக்கோட்டை அருகே மாணவர்களிடம் ஆபாசமாக நடந்த தனியார் செவிலியர் கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஜான் பாஜக சிறுபான்மை பிரிவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளிகள்,கல்லூரிகளில் மாணவிகளைப்.பாதுகாக்க வேண்டிய […]
திமுக ஐந்து வருடம் அல்ல இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்டூர் பகுதி தொகுதியில் திமுக சார்பில் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நிகழ்வு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் கலைஞர் அவர்கள் எந்த திட்டத்தை தொடங்கினாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். அதேபோல் முன்னாள் முதல்வர் […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே […]
திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கான 2ம் கட்ட தேர்தல் அட்டவணை வெளியீடு. திமுகவின் கட்சிப் பொறுப்புகளுக்கு தற்போது உள்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய பொறுப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அட்டவணையை வெளியிட்டது திமுக தலைமை. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஜூன் 15-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கு சம்மன். ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக 5 மருத்துவமனைகளில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திரா, கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே, சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில், சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களுடன் இன்று நேரில் […]
புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், சி.டிக்கள், பான்மசாலாக்கள் பெயரில் புகையிலை விளம்பரங்களையும் மறைமுகமாக செய்ய தடை விதித்து மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சோடா விளம்பரம் என்ற பெயரில் மது விளம்பரங்களையும், […]
இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம் […]
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைந்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது […]
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டத்தை இயற்றி, இனி இந்த சூதாட்டத்தால் எந்த ஒரு உயிரிழப்பும் நேராத வண்ணம் மக்களை காக்க வேண்டும் என ஈபிஎஸ் ட்வீட். ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்சியாக நடைபெற்று […]
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் – மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை கும்பகோணம் தாராசுரம் KSK கல்லூரியில் தொடங்கி வைத்து, வேலை கிடைக்கப்பெற்ற இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் […]
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தகவல். வளிமண்டல சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு […]
சென்னை,பிராட்வே பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரி மறைந்த டிராபிக் ராமசாமி முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கடந்த 2016 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிராபிக் ராமசாமி தொடர்ந்திருந்தார்.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில்,இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்,மாற்று இடம் […]
கோவை, திருப்பூர், மதுரை, ஓசூர் உள்ளிட்ட நகரங்களில் பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த, கட்டுமான திட்ட அனுமதியை விரைவுபடுத்த பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பெருநகர வளர்ச்சி குழுமம் அமைக்க ஐஏஎஸ் நிலையில் சிறப்பு அதிகார பணியிடங்களை உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய […]