#BREAKING: தமிழகத்தில் 8 ஆண்டுகளாக நடந்த வன்கொடுமையை விசாரிக்க கோரி முறையீடு..!

Default Image

தமிழகத்தில் 8 ஆண்டுகளாக சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் அருள் முறையீடு செய்துள்ளார். அதில், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. வன்கொடுமை சம்பவங்கள் குறித்து நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் நிகழ்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் முறையாக அமல்படுத்தபடுகிறதா..? என்பது கேள்வி குறியாக உள்ளது.

போக்சோ சட்டம் முறையாக நடைமுறைப்படுத்ததன் காரணமாகவே தமிழகத்தில் சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது, எனவே நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT