இதை சொல்லி மிரட்டிய பாஜக… ஜெயலலிதா போல் தைரியமான முடிவெடுத்த பிரேமலதா!

Published by
பாலா கலியமூர்த்தி

Premalatha: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றசாட்டு.

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் நல்லதம்பியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூறியதாவது, அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்.

2021ல் வர வேண்டிய வெற்றி 2026ல் உறுதியாக வரும். இந்த தேர்தல் ஒரு சரித்திர சாதனையாக இருக்கும். பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கவோம் என பாஜக அச்சுறுத்தினார்கள். அதிமுக அலுவலகம் சென்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்துயிடும் வரை பாஜகவில் இருந்து நிறைய மிரட்டல், நிர்பந்தம் வந்த வண்ணம் இருந்தது.

ஆனால், எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போல் தைரியமாக முடிவெடுத்தேன். இந்த முறை அதிமுகவுடன் தான் கூட்டணி என்று தைரியமாக உறுதியாக இருந்தேன். எவ்வளவோ பயம் காட்டினார்கள், ஆனா இந்த பணக்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது. எதனை சோதனைகள் வந்தாலும், மிரட்டல்கள் வந்தாலும் இதனை கண்டு கேப்டனும் சரி, நானும் சரி அஞ்சமாட்டோம் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

2 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

3 hours ago

விருதுநகர் : பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…

3 hours ago

சபாஷ் சரியான போட்டி…குகேஷை அசால்ட்டாக வீழ்த்திய பிரக்ஞானந்தா!

குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…

4 hours ago

மகளிர் உரிமைத்தொகை பெற நாளை முதல் விண்ணப்பம்!

சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…

5 hours ago

தற்காலிகமாக விலகிய தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! காரணம் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…

5 hours ago