“தொட்டாலே உதிர்கிறது;ஆனால்,செலவுக் கணக்கு ரூ.15 லட்சம்” – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

Published by
Edison

புளியந்தோப்பு கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது;இதனால்,மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு கரை ஓரம் உள்ள குடிசைகளில் வாழும் மக்களை வேறு இடத்தில் குடியமர்த்த சென்னை புளியந்தோப்பு கேசவபிள்ளை(கேபி) பூங்கா பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2018 முதல் 2021 வரை கடந்த இரண்டு கட்டங்களாக அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியது.இதில்,இரண்டு தனியார் கட்டுமான நிறுவனங்கள் பங்காற்றியுள்ளன.

அதன்படி,முதற்கட்டப்பணிகள் 2018 முதல் 2020 வரை நடந்த நிலையில் ரூ.112.16 கோடி செலவில் 864 வீடுகள் கட்டப்பட்டன. இரண்டாம் கட்ட பணிகள் 2019 இல் தொடங்கி 2021 வரை நடந்த நிலையில் ரூ.139.13கோடி செலவில் 1056 வீடுகள் கட்டப்பட்டன.பன்னடுக்கு குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும் 14.61 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டதாக குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால்,கட்டிமுடிக்கப்பட்டு இரண்டு, மூன்று ஆண்டுகளே ஆகிய நிலையில்,இந்த அடுக்குமாடி கட்டடங்களின் நிலைமை அதிர்ச்சியடைய வைக்கிறது.ஏனெனில்,சுற்றுச்சுவர், உள்சுவர், மேற்கூரை என அனைத்து பகுதிகளிலும் ஒரு விரலால் லேசாக தொட்டாலே சுவர் பெயர்ந்து மண் கொட்டுகிறது.இதனால்,இங்கு குடியேறியவர்கள், அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளும் நாட்களை கழிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,புளியந்தோப்பு கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது;இதனால்,மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு.

இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

7 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago