வாக்கு எண்ணும் மையத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்! வேட்பாளர்கள், தொண்டர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்!

Default Image
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
  • குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அப்பகுதியில் உள்ள காட்டெருமைகள் உள்ளே புகுந்ததால் அங்கிருந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் அங்கு சுற்றுப்புறத்தில் உள்ள காட்டெருமைகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்துவிட்டன. இதனை கண்டு அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள், தொண்டர்கள் என அங்குள்ளவர்ர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai