சிறுவனிடம் சொன்ன வாக்கை காப்பாற்றிய ராகுல் காந்தி…! என்ன செய்துள்ளார் தெரியுமா?

Published by
லீனா

ராகுல் காந்தி, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்த நிலையில், அதனை வாங்கி அனுப்பியுள்ளார். 

சமீப காலமாகவே ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிற நிலையில், மக்களுடன் மக்களாய் மிகவும் சகஜமான முறையில் பழகி வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, 5-ம் வகுப்பு சிறுவன் ஒருவனுக்கு, விளையாட்டு தேவைக்காக ஸூ வாங்கி தருவதாக உறுதி அளித்து இருந்தார். மேலும், அவர் கூறியபடி ஒன்பது நாட்களுக்குப் பின் அச்சிறுவனுக்கு ஸூ ஒன்று வாங்கி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து சிறுவன் ஆண்டனி பெளிக்ஸ் கூறுகையில், சாலையோரம் நிற்கும் போது தன்னை ராகுல்காந்தி தம்பி வா என்று அழைத்து டீ வாங்கிக் கொடுத்ததாகவும், என்ன படிக்கிறாய், எந்த விளையாட்டில் ஆர்வம் என கேட்டு, ரன்னிங் என்று கூறியதை அடுத்து ஸூ வாங்கி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ராகுல் காந்தி விளையாட்டு பயிற்சியாளர் ஒருவரை ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளார். அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும் என்றும்,  நான் சாம்பியன் ஆன பிறகு அவரை சென்று சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

29 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

3 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago