#RainAlert:தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

Default Image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம், திருப்பூர்,கோவை,நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதே சமயம்,தென் தமிழகக் கடலோரப் பகுதிகளிலும்,குமரி பகுதியிலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் 60 கிமீ வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும்,நாளையும் மீனவர்கள் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்