கொரோனா -மக்களுக்கு அரசு உதவ ரஜினி கோரிக்கை.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.இதன்  காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும்

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.இதன்  காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் . அதில் ,”தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டத்தக்கவை. அரசொடு சேர்ந்த மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் வராமல் தடுக்க ஒத்துழைப்போம்.

unknown node

இந்த இக்கட்டான சூழ்நிலையையில்  அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை  அளித்தால், அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் “.