நடிகர் ரஜினி ஜனவரி மாதம் கட்சி ஆரமிக்கவுள்ள நிலையில், அக்கட்சியில் தொடக்க விழாவை மதுரையில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் தாம் கட்சி தொடங்குவதாகவும், அது தொடர்பான அறிவிப்புகளை டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அவரின் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கட்சி தொடங்குவது தொடர்பான பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ள நிலையில், அந்த பொதுக்கூட்டத்தை எங்கு நடத்துவது என்று அக்கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி மற்றும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்பொழுது சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் கட்சி தொடக்க விழாவை நடத்தலாம் என கூறப்பட்டதாகவும், இதில் மதுரையில் கட்சி தொடக்க விழா நடத்தவுள்ளதாகவும், அதில் கட்சியின் பெயர், சின்னம், தேர்தல் பிரச்சார பயண திட்டம், கட்சியின் கொள்கை ஆகியவற்றை ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…