ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம்!

Default Image

தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக ஓய்வு பெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நியமனம்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற புஷ்பா சத்தியநாராயணா தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினராக நியமனம் செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013-ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடந்த 1960-ம் ஆண்டு பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 1985-ல் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். சென்னை உயா்நீதிமன்றத்தில் மூத்த பெண் நீதிபதியாகப் பதவி வகித்து வரும் புஷ்பா சத்தியநாராயணா பிப்.27 ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்