பால் தட்டுப்பாடு அபாயம்! சென்னை ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Published by
லீனா

சென்னை ஆவின் பால் பண்ணையில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனால், இந்தியா முழுவதும், மே-17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில்,  42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சென்னையில், கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில்,  1400-க்கு மேற்பட்டோர் இந்த வைராஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னை, மாதவரம் பால்பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பால்பண்ணையில், பேக்கிங் செக்சனில் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த பால்பண்ணையில், 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிற நிலையில், 2 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். இதனால், பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. 

ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

24 minutes ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

39 minutes ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

1 hour ago

LSG vs GT: குஜராத்தை சமாளிக்குமா லக்னோ அணி.? டாஸ் மற்றும் பிளேயிங் லெவன் விவரம்.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

2 hours ago

நாளை வெளியாகவிருந்த சண்முக பாண்டியனின் ‘படைத்தலைவன்’ திடீரென ஒத்திவைப்பு.! காரணம் என்ன.?

சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…

3 hours ago

டாஸ்மாக் விவகாரம்: ”அமலாக்கத்துறை எல்லா எல்லைகளையும் தாண்டியுள்ளது” – உச்சநீதிமன்றம்.!

சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…

3 hours ago