ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொதை – டிஜிபி சைலேந்திரபாபு

இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் சேர்ப்பது எங்கள் இலக்கு என டிஜிபி பேட்டி.

இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் சேர்ப்பது எங்கள் இலக்கு என டிஜிபி பேட்டி.

தமிழ்நாடு கடலோர பகுதி மீனவர்களின் வாரிசுகளுக்கு பயிற்சி துவக்கவிழாவில் கலந்துகொண்ட பின் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொதை வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு நூறு மீனவ இளைஞர்களை இந்திய கப்பற்படையில் சேர்ப்பது எங்கள் இலக்கு எனவும் தெரிவித்தார்.

இதன்பின் பேசிய டிஜிபி, இரவு நேர சோதனையில் இலக்கு ஏதும் நிர்ணயிக்கவில்லை. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்டறிய நவீன கருவி வழங்கப்படுகிறது. இயந்திரத்தில் தவறு இருந்தால், புதிய இயந்திரம் மாற்றப்படும் எனவும் கூறினார்.