பாஜக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக ரூ.13 கோடி..? வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் ..!

Published by
murugan

வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக பாஜக ரூ.13 கோடி கொடுத்தது என்பது உண்மையில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசஸ் (twitter space) என்பது ஆடியோ மூலம் குழுவாக பேசலாம். இந்த ட்விட்டர் ஸ்பேஸஸ்ஸில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு பாஜக தலைமை வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.13 கோடி கொடுத்திருப்பதாக தான் கேள்விப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் முறையாக கணக்கு கொடுக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

மேலும், தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் மோடியின் படத்தைப் பயன்படுத்தாமல் ஜெயலலிதா படத்தைப் பயன்படுத்தினார்கள். நான் வேட்பாளராக இருந்திருந்தால்  மோடியின் படத்தைப் பயன்படுத்தி இருந்திருப்பேன் என தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் பேசியது குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனிடம் எழுப்பிய கேள்விக்கு, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக பாஜக ரூ.13 கோடி கொடுத்தது என்பது உண்மையில்லை; யாரோ இருவர் பேசிய ஆடியோ எப்படி உண்மையாகும்.? என தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் படி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தால் தேர்தல் விதி மீறல் ஆகும். எஸ்.வி.சேகர் கூறியதை வைத்து பார்த்தால் பாஜக சார்பில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டனர். அப்படியென்றால் பாஜக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.260 கோடி பணத்தை செலவிட்டுள்ளதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago