#BREAKING: புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.286 கோடி ஒதுக்கீடு..!

The central government has allocated Rs 286 crore for storm-hit Tamil Nadu.

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது .

நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டில் நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ 63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புகளுக்கு ரூ 223.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட நிவர் மற்றும் புரவிபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.