மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் வாரிசு யார் என கருத்துக் கணிப்பில் வெளியிட்ட தினகரன் அலுவலகத்தின் மீது 2007 ஆம் ஆண்டு தாக்குதல் நடந்தது. அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் தினகரன் அலுவலகத்தில் பணிபுரிந்த முத்துராமலிங்கம், கோபிநாத்,வினோத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
unknown nodeஇந்த வழக்கு வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு மதுரை செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் 12 வருடம் கழித்து இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.
unknown nodeபல்வேறு பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதலின் போது கொல்லப்பட்ட ஊழியர்கள் 3 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு அடுத்த 3 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலின்போது மதுரை மாவட்ட ஏடிஎஸ்பி ஆக இருந்த ராஜாராம் தாக்குதலை பெரிதாக கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் கண் முன்னரே பல பயங்கரம் நடந்தது எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அப்போதைய ஏடிஎஸ்பி தற்போது ஓய்வுபெற்றுள்ள ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.