seeman: நடிகை விஜயலட்சுமி புகார் – சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன்!

Seeman Et

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நேரில் விசாரணைக்கு ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து விஜயலட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

அதுமட்டுமில்லாமல் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.  நடிகை விஜய லட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், ந்த விசாரணக்கு ஆஜராகாத சீமான், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறும் தனது வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் கடிதங்களை அளித்திருந்தனர். இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, சீமானுக்கு இரண்டாவது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு மீண்டும் சம்மன் அளிக்க வளசரவாக்கம் போலீசார் சென்றுள்ளனர்.

அப்போது, வளசரவாக்கம் சரகம் உதவி ஆணையருடன் பேசுவதாக தெரிவித்து சம்மனை வாங்க சீமான் மறுத்ததாக கூறப்படுகிறது. சம்மன் வழங்க போலீசார் முயற்சி செய்த நிலையில், வாங்க மறுத்துள்ளார். அங்கு சம்மனை வாங்க மறுத்ததால் போலீஸார் சம்மனை வழங்காமல் திரும்பி சென்றனர். இருப்பினும் சம்மன் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடிகை விஜயலட்சுமி மீது மானநஷ்ட வழக்கு தொடர சீமான் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்