அதிர்ச்சி : தடுப்பூசி முகாமில் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி..! 3 பேருக்கு வாந்தி மயக்கம்..!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாமில், பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டதால் 3 பேருக்கு வாந்தி மயக்கம்.
சிவகங்கை : இன்று தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அங்கு பணியாளர்களுக்கு பல்லி விழுந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவை உட்கொண்ட 3 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்த சம்பவம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் அந்த மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது, பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகத்தை ஒருவாரத்திற்கு திறக்கக்கூடாது என்று கூறி சீல் வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025