கோடைகால தொடங்க உள்ளதால் கோடைகால சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தாம்பரத்தில் இருந்து
ஏப்ரல் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும்,
மே 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலுக்கு கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது
நாகர்கோவிலில் இருந்து
ஏப்ரல் 9, 16, 23, 30,
மே 7, 14, 21, 28,
ஜூன் 4, 11, 18, 25,
ஜூலை 2 ஆகிய தேதிகளில் கோடை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நாகர்கோவிலில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 ம்ணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.
எர்ணாகுளத்தில் இருந்து
ஏப்ரல் 4, 11, 18, 25,
மே 2, 9, 16, 23, 30,
ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் காலை 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடைகிறது.
வேளாங்கன்னியில் இருந்து
ஏப்ரல் 5, 12, 19, 26,
மே 3, 10, 17, 24, 31,
ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு எர்ணாகுளம் வந்தடைகிறது.
எர்ணாகுளத்தில் இருந்து
ஏப்ரல் 2, 9, 16, 23, 30,
மே 7, 14, 21, 28,
ஜூன் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது.
ராமேஸ்வரத்தில் இருந்து
ஏப்ரல் 3, 10, 17, 24,
மே 1, 8, 15, 22, 29,
ஜூன் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்குஎர்ணாகுளம் வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில்