சென்னையில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டிகளை சென்னை நடத்துகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். மதிப்புமிக்க இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 போட்டிகள் ஜூன் மாதம் 13 முதல் 17 வரை சென்னையில் நடைபெறுகிறது.
இதுபோன்ற உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்தும் இலக்காக மாற்றுவதற்கான எங்கள் முயற்சிகளில் இது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல், இதற்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.<
unknown node