இலங்கை நிழல் உலக தாதாவின் கூட்டாளி தலைமறைவு… காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை….

Published by
kavitha

தலைமறைவான இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, 36, கோவை மாவட்டத்தில்  போலி ஆதார் அட்டை பெற்று பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் தமிழகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 3ல், உயிரிழந்த நிலையில், மதுரையில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின், அங்கொட லொக்கா பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கியை, அவரது இறப்புக்கு பின், கூட்டாளி சனுக்கா தனநாயக்காவிடம் கொடுத்துள்ளனர். அவர் ஜூலை, 20 வரை மதுரையில் தங்கியுள்ள்ளார். இந்நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி., – டி.எஸ்.பி., ராஜு அவர்கள் தலைமையில், சனுக்கா தனநாயக்காவை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘சனுக்கா தனநாயக்கா, இந்தியாவை விட்டு செல்லவில்லை. அவர் மதுரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய பகுதிகளில் பதுங்கியிக்கலாம் என்பதால், தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அவர் பிடிபட்ட பின்னரே அங்கொட லொக்கா குறித்த மர்மங்கள் விலகும்’ என்றனர்.

Published by
kavitha

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

10 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

12 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

12 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

12 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

13 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

14 hours ago