திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக தலைவர் முக ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின் அடுத்த தலைவர் யார் என்று அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், கடந்த 2014- ஆம் ஆண்டு அழகிரியை கட்சியில் இருந்து நீங்கியதால், கலைஞர் மறைந்து சுமார் 20 நாட்களுக்கு பிறகு திமுக கூட்டத்தில் ஒருமனதாக மு.க ஸ்டாலினை தலைவராக தேர்தெடுத்தனர். இதனையடுத்து, கட்சிக்காக அயராத உழைத்து வரும் ஸ்டாலின் பல இன்னல்களை சந்தித்தும் தயங்காத தூணாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் தலைவர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் திமுக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முக ஸ்டாலினுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…