மாணவர்கள் பேருந்துகளில் இன்று முதல் கட்டணமின்றி பயணிக்கலாம்..!

Published by
murugan

இன்று முதல் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை இலவசமாக பயணிக்கலாம் .

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், கோவிட்-19 கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள் வரை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்பைடையில், பள்ளி மற்றும் அரசு கல்லூரிகள் வரும் 01.09.2021 முதல் திறக்கப்பட உள்ளது.

எனவே, 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் புகைப்படத்துடன் சீருடை அல்லது கூடிய அடையாள பள்ளிகளில் வழங்கப்பட்ட அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே போன்று. அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI, Government College. Government Polytechnics) பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையா அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

44 minutes ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

1 hour ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

1 hour ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

2 hours ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

2 hours ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago