படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிக்காமல் தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கு அதிகம் உள்ளது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேரடி நியமன வட்டாராக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவக்க விழா நாகமலை புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி மாணவர்கள் ஸ்டைலாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்தில் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணிப்பதும், ஓடும் பேருந்தில் ஏறுவதும் ஸ்டைல் என நினைப்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அதிகமாக உள்ளது. நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநரை சந்தித்து பேசினோம். விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுவார்.
அதன் மூலம் நீட் தேர்வுக்கு நல்லதொரு முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…