தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,’உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒரு இந்திய மொழி மற்றும் ஒரு உலக மொழி கற்பிக்க வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்ளிட்ட பல மொழிகள் கற்று தரப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரஞ்சு, இந்தி மொழி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் மாணவர்களே விருப்ப பாடத்தை எழுதி கொடுத்து தேர்வு செய்கிறார்கள்.இந்த நிறுவனத்தில் இந்தி என்பது கட்டாய மொழிப் பாடம் அல்ல.விருப்ப பாடம் ஆகும்.தமிழ் என்பதே தமிழக அரசின் உயிர் மூச்சு ஆகும்.இந்தியை திணிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025