மினி கிளினிக் திட்டம் – தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

Tamil Nadu govt led by CM Of Tamil Nadu Edappadi K Palaniswami Launches 2000 mini clinics across the state.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில்,அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.இதனிடையே தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதிதாக டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் 2000மினிகிளினிக்அமைக்கப்பட உள்ள நிலையில் முதல்கட்டமாக 630மினிகிளினிக்குகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.காலை 8 -12 மணி வரையும், மாலை 4- 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்.இந்த மினி கிளினிக்கல் ஹீமோகுளோபின் ,சர்க்கரைநோய் பரிசோதனை, மகப்பேறு,ரத்த அழுத்த பரிசோதனை ,காய்ச்சல், சளி போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.