Thamimun Ansari [file image]
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியை மாநில தலைவராக நியமனம் செய்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு முடிவுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிமுன் அன்சாரி மாநில தலைவராக தனது பணிகளை தொடருவார் என தலைமை நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாநில தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு, தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அப்போது, கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவராக தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் ஜெஎஸ். ரிஃபாயீ, துணைத்தலைவர் மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளர் செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…