டாஸ்மாக் மதுவிற்பனை – நேற்று ஒரே நாளில் 98.3 கோடி ரூபாய் வசூல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98.3 கோடி ரூபாய் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளை உயர் நீதிமன்றம் விதித்த விதி முறைகளை கடைப் பிடிக்கவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவை தள்ளுபடி செய்து மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கியது. 

இதனால், கடந்த சனிக்கிழமை மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதுவும், டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 98.3 கோடி ரூபாய் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை 6.8கோடி, திருச்சி 24.4கோடி, மதுரை 23.5கோடி, சேலம் 22.7கோடி, கோவை 20.9 கோடி என மொத்தம் 98.3 கோடி ரூபாய் விற்பனை நடந்துள்ளது. திறக்கப்பட்ட சனிக்கிழமை முதல் நாளே ரூ.163 கோடிக்கும், அடுத்த நாள் ஞாயிற்று கிழமை ரூ.133.1 கோடிக்கும், திங்கள் கிழமை ரூ.109.3 கோடிக்கும், செவ்வாய்க்கிழமை ரூ.91.5 கோடிக்கும் , நேற்று ரூ.98.3 கோடிக்கும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

8 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

11 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

11 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

12 hours ago