தேயிலை வாரியம் கலப்படம் செய்யப்படும் தேயிலை தூள் பயன்பாடுகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் தேயிலை வாரியத்தின் துணை இயக்குநர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அண்மை காலமாக் கலப்பட தேயிலைத் தூகள்களின் புழக்கம் மற்றும் அதனை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.இந்த கலப்படத்தினை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கலப்படும் செய்யப்படும் தேயிலை தூள்களின் பயன்பாடு எங்கு இருப்பது தெரிந்தால் அதனை உடனடியாக வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.இந்த தகவலை தெரிவிக்கின்ற அந்த நபருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று தேயிலை வாரியம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.