90 வயது பாட்டியின் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை நேரில் சென்று மீண்டும் ஆணை வழங்கிய திருப்பத்தூர் வட்டாட்சியர்…

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி. இவர் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் முலம் மாதம் 1000 ரூபாய் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அலைந்தது திரிந்துள்ளர். எனினும் அதிகாரிகள் ஓய்வூதியம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்னர் இதுப்பற்றிய விவரம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. இதையறிந்த திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். இதில், உண்மையில் அந்த முதாட்டி உதவித்தொகை பெற தகுதியானவர் என்பது தெரிந்து வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று மூதாட்டிக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார். ஊடகத்தில் வந்த செய்தியை உரிய விசாரணை செய்து நேரடியாக சென்று அரசின் உதவித்தொகை கிடைக்க செய்த ஒருசில அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது என்று சமூகசேவகர்கள் கருதுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025