தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா.? முதல்வர் விளக்கம்.!

Published by
மணிகண்டன்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த வியாழன் அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில், உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை சார்ந்த மானிய கோரிக்கைகளுக்கு அந்ததந்த துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வந்தனர்.

அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தமிழக சட்டப்பேரவையில், முன்னதாக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு நிறைவேற்றப்பட்டு இருந்த 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்தில் சாதிவாரி கனக்கடுப்பு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தார்.

அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர்,ரகுபதி, வன்னியக்கர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு என்பது போதிய தரவுகள் இல்லாத காரணத்தால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் தரவுகள் சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையின்படி உள்இடஒதுக்கீடு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தமிழக சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, இதுவரை உள்இடஒதுக்கீட்டை மாநில அரசுகளே செயல்படுத்தி உள்ளன என்றும், உள்இடஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த போது அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசுதான் என்றும் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசினார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

2 hours ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

3 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

4 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

11 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

12 hours ago