இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் இதனால், எங்கு மது கிடைக்கும் என அலைமோதி திரிகின்றனர். இதனையடுத்து, புலிமேடு கிராமத்தில் அல்லேரி மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று இரவு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க நினைத்த கிராம மக்கள் கள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவற்றை வாங்க வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள்ளனர்.
இந்நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த சாராய விற்பனை கும்பல் நாட்டு துப்பாக்கிகளால் சுட்டதில், புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…