தமிழகத்தில் தொடரும் சோதனை!விசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

The Income Tax Department checks the company's own company

விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான  நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு  முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில்  ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

unknown node

அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை  மேற்கொண்டனர்.மேலும்  தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .பின்னர்  துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.அதேபோல்  சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் தெரிவித்தனர்.

unknown node

இன்று (ஏப்ரல் 3 ஆம் தேதி) திருச்சி மன்னார்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான  நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.காலை நடைபெற்ற இந்த சோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.